கோவையில் கொட்டித்தீர்த்த கனமழை- தாழ்வான பகுதிகளில் பொதுமக்கள் பாதிப்பு

கோவை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்தது. இதில், நேற்று ஒரே நாளில் 92 மி.மீ மழை பதிவானது கோவை மாவட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள், விவசாயிகளை மகிர்ச்சியடையச் செய்துள்ளது. இருப்பினும், பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் வாட்டியெடுத்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று மாலை சுமார் 7 மணியளவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், டவுன்ஹால், ரயில் நிலைய சாலை, லங்கா கார்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, ரேஸ் கோர்ஸ், காந்தி பார்க், அவிநாசி மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீருடன், சாக்கடை நீரும் கலந்து சாலையிலும், தாழ்வான பகுதிகளிலும் தேங்கியது.

நகரின் மத்தியில் உள்ள ரேஸ்கோர்ஸ், ரயில் நிலையம் அருகிலுள்ள லங்கா கார்னர், வடகோவை மேம்பாலம் மற்றும் காட்டூர் உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. உக்கடம் அருகே, பாலக்காடு சாலையில், பெரிய குளத்தின் கிழக்குக் கரையை ஒட்டிய பகுதியில் பெருவெள்ளம் சூழந்ததால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.

மேலும், சில பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக மரக் கிளைகள் உடைந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...