கோவையில் கொட்டித்தீர்த்த கனமழை- தாழ்வான பகுதிகளில் பொதுமக்கள் பாதிப்பு

கோவை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்தது. இதில், நேற்று ஒரே நாளில் 92 மி.மீ மழை பதிவானது கோவை மாவட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள், விவசாயிகளை மகிர்ச்சியடையச் செய்துள்ளது. இருப்பினும், பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் வாட்டியெடுத்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று மாலை சுமார் 7 மணியளவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், டவுன்ஹால், ரயில் நிலைய சாலை, லங்கா கார்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, ரேஸ் கோர்ஸ், காந்தி பார்க், அவிநாசி மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீருடன், சாக்கடை நீரும் கலந்து சாலையிலும், தாழ்வான பகுதிகளிலும் தேங்கியது.

நகரின் மத்தியில் உள்ள ரேஸ்கோர்ஸ், ரயில் நிலையம் அருகிலுள்ள லங்கா கார்னர், வடகோவை மேம்பாலம் மற்றும் காட்டூர் உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. உக்கடம் அருகே, பாலக்காடு சாலையில், பெரிய குளத்தின் கிழக்குக் கரையை ஒட்டிய பகுதியில் பெருவெள்ளம் சூழந்ததால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.

மேலும், சில பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக மரக் கிளைகள் உடைந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...