அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சிலம்பப் பயிற்சி

கோவை மாவட்டத்தில், பொருளாதார ரீதியாக பலவீனமாக உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தற்காப்பு மற்றும் நம் பாரம்பரிய கலையினை அறிந்துகொள்ளும் வகையில் அக்னி சிறகுகள் சார்பில் இலவசமாக சிலம்பம் பயிற்சிகள் துவங்கப்பட்டுள்ளன.



இதற்கான துவக்க விழா பொள்ளாச்சி அருகே உள்ள சங்கபாளையம் பஞ்சாயத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் போது, பிஷப் அப்பாசாமி கல்லூரி மாணவர் கார்த்திக் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார். 

இத்திட்டம் குறித்து இதன் தலைவர் எம்.பிரபு கூறியதாவது:- பயிற்சியாளர்கள் இந்த பள்ளியின் மாணவர்களுடன் முடிந்தவரை நீண்டகால பயிற்சியினை தொடரவும் மற்றும் எதிர்காலத்தில் மற்ற அரசு பள்ளிகளில் இத்திட்டத்தினை நீட்டிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.



இப்பயிற்சிகளுக்கு மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. மாணவர்களின் அதீத ஆர்வத்தினைக் காணும்போது பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.



மாணவர்களின் கல்வி நேரம் பாதிக்கப்படாத வகையில் பயிற்சிக்கான நேரம் ஒதுக்கப்படும். புத்தகங்கள் மற்றும் ஆய்வுளைத் தவிர மாணவர்கள் இதுபோன்ற செயல்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அத்தகைய பயிற்சிகள் இளம் வயதிலேயே ஆரம்பிக்க வேண்டும்.

மேலும், கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளிலும் இப்பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...