நீட் தேர்வைக் கண்டித்து வால்பாறை பாரதியார் கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் இன்று வால்பாறையில் செயல்பட்டு வரும் பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



முன்னதாக, நீட் தேர்வினால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், மாணவி அனிதாவின் உயிரிழப்பிற்கு மத்திய அரசும், மாநில அரசுமே காரணம். மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோதத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. ஏழை மாணவ, மாணவியர்களின் கல்வியினை கேள்விக்குறியாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று முழக்கமிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை வட்டாட்சியர் குணசேகரன் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...