நீட் தேர்வு விவகாரம் - சமூக வலைதளங்களில் வைரலாகும் ஜெயலலிதா கடிதம்

கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. 

ஆனால், ஓராண்டுக்கு மட்டுமே விலக்கு அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், மருத்துவப் படிப்பிற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இது, தமிழக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 





அதில், மத்திய அரசிடம் ஜெயலலிதா வலியுறுத்தியிருப்பதாவது:-  மருத்துவப் படிப்பிற்கான மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். 

நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் செயல். நீட் நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தினால், கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கு போதிய பயிற்சி மையம் இல்லை. அவ்வாறு இருந்தால், அதில் பயன்பெறக் கூடிய வசதியில்லாதவர்களாக உள்ளனர். 

சமூக - பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்காகவே, தமிழக அரசின் சார்பில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், தொலைதூரக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே, தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில், மாற்றம் செய்யக் கூடாது. எதிர்காலத்திலும், நீட் தேர்வை தமிழகத்தில் கொண்டுவர அனுமதிக்கக் கூடாது. 

இவ்வாறு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா,  பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டது. 

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...