நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கைக்கு எதிர்ப்பு - தற்காலிகமாக மாணவர் சேர்க்கையை நிறுத்தியது வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி

வேலூரில் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் சேர தனியாக நுழைவுத் தேர்வு நடத்தபடும். அதில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு நீட்தேர்வு முறை அமல்படுத்தபட்டுள்ளது. நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு சி.எம்.சி. நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.எம்.சி. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மருத்துவ மணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

இது தொடர்பாக  சி.எம்.சி. நிர்வாக அதிகாரிகள் கூறுகையில்:- சுதந்திரத்துக்கு முன்பு ஆரம்பிக்கபட்ட சி.எம்.சி. மருத்துவ கல்லூரிக்கு தனி பாரம்பரியம் உள்ளது. அரசு உத்தரவுப்படி நீட் தேர்வை ஆதரிக்கிறோம். ஆனால் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சி.எம்.சி. தனியாக நுழைவுத்தேர்வு நடத்தும். அதில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தபடும். 

அவர்களின் சமூக அக்கறை குழுவாக பணியாற்றும் பண்பு கிராமங்களில் சேவை செய்வது ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தபடும். நீட்தேர்வு அடிப்படையிலான நேரடி சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அக்டோபர் 11-ம் தேதி தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும் என நம்புகிறோம்  என்றனர்.

100 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் சேர்க்கையை நிறுத்திவைத்துள்ளது. மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அரசு உடனடியாக தடையில்லா நடிவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...