நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

ஈரோட்டில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் கோவை வந்தார். 

அப்போது, விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்:- பதவி ஏற்றதில் இருந்து தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறுகின்றார்.  அவர் கூறுவது அனைத்தும் தவறானது.  அ.தி.மு.க.,வில் சபாநாயகருடன் சேர்ந்து 135 எம்.எல்.ஏ.,க்கள் பெரும்பான்மையுடன் இருக்கின்றோம். பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு அரசுக்கு இருக்கிறது. 



நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டது. ஆனால், தீர்ப்பு தமிழக அரசின் முடிவுக்கு எதிராக வந்ததால், நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

மேலும்,  நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்பது தான் தங்கள் நிலைப்பாடு. இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பேட்டியின் போது, அமைச்சர் வேலுமணி, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி உள்பட பல சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...