ஊழலில் சிக்கித் தவிக்கும் குடிசைமாற்று வாரியம்- மழைநீரினால் போராடும் சி.எம்.சி காலனி மக்கள்

கோவையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாழ்வான குடிசை பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைத்துள்ளது. குறிப்பாக, குளக்கரை போன்ற தாழ்வான பகுதிகளில் வாழும் குடிசைவாழ் மக்கள் இரவு நேரங்களில் பெய்து வரும் கனமழையால் தங்கள் வீடுகளில் மழைநீர் தேங்கி பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.



இதுபோன்ற வீடுகளில் வசிக்கும் மக்கள் மறுநாள் வீதிகளிலோ, மண்டபங்களிலோ தங்கும் நிலை நாம் அறிந்ததே. இவர்களுக்கு உதவும் வகையில் அரசாங்கமும் பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டியும் வருகிறது. ஆனால், ஆளும் அரசினாலும், குறிப்பிட்ட ஒருசில அரசாங்க அதிகாரிகளின் ஊழல்களாலும் பாமரமக்களுக்கு என ஒதுக்கப்பட்ட வீடுகள் இன்னும் அவர்களுக்கு சென்றடையவில்லை.



குறிப்பாக, கோவை வெரைட்டிஹால் சாலையில் உள்ள சி.எம்.சி. காலனியில் 400-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் பலர் வசிக்கின்றனர். இந்த குடியிருப்புகளில் வீடு கிடைக்காத சுமார், நுாற்றுக்கணக்கானோர் அருகில் உள்ள சிட்டி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து குடிசைகள் அமைத்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நீர்வழியோரங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கும், குடிசைகளில் வசிப்போருக்கும் என அம்மன்குளம், கணபதி, உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தந்துள்ள மாநகராட்சி நிர்வாகம், சி.எம்.சி., காலனி மக்களுக்கும், வெள்ளலுாரில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தந்துள்ளது. ஆனால் அது முறையாக தகுதிவாய்ந்தவர்களுக்கு சென்றடைந்ததா என்பது கேள்விக்குறியே.



இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''கோவையில் பெய்யும் தீடீர் கனமழையால் நாங்கள் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் புகுந்து வீடுகளை சேதம் செய்கிறது. இதனால், நாங்கள் மண்டபங்களில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. தற்போது இங்கு வசித்து வரும் பெரும்பாலானோர் துப்புரவு தொழிலாளர்களே. காலையில் நேரமாக எங்கள் பணிகள் துவங்குவதால், வெள்ளலூர் பகுதிகளில் இருந்து எங்களால் டவுன் பகுதிக்கு வர முடியாது. எனவே, மாநகராட்சி சார்பில் துப்புரவு தொழிலாளர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதேபோல், வெள்ளலூர் பகுதி பள்ளிகளில் எங்கள் குழந்தைகளை படிக்கவைக்க மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும். 

தற்போது இங்கு வசித்து வரும் 400-க்கும் மேற்பட்ட வீடுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் அளிக்க போவதாகவும், தேவையான ஆவணங்கள் மற்றும் 36 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவற்றை செல்வபுரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு கொண்டு வருமாறும் கடந்த மாதம் குடிசை மாற்று வாரியத்தினர் அறிவித்தனர்.

துப்புரவுத் தொழிலாளர்களான நாங்கள் தினக் கூலியாக ரூ.200 சம்பாதித்து வருகிறோம். இதில், குடிசை மாற்று வாரியத்தில் வீடு பெற 36 ஆயிரம் ரூபாய் நியாயமற்றது. மேலும், இந்த தொகையினை வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் செலுத்த வேண்டும் என்கின்றனர் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள். இதற்கு நிரந்தர தீர்வினை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் ஏற்படுத்தி தங்களுக்கான வாழ்விடத்தை அமைத்து தர வேண்டும் என்கின்றனர் சி.எம்.சி பகுதி மக்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...