நீட் தேர்வுக்கு எதிராக அனைத்திந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் : 30க்கும் மேற்பட்டோர் கைது


நீட் விவகாரம் மற்றும் அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டம் 6-வது நாளாக இன்றும்(செப்.,7) நீடிக்கிறது. 



இந்த நிலையில், கோவை, ஹோப் காலேஜ் பகுதியில் கோவை - சேலம் நெடுஞ்சாலையில் எஸ்.எப்.ஐ., மாணவர்கள் அமைப்பினர் இன்று (செப்.,7) திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக எஸ்.எப்.ஐ., மாணவர்கள் அமைப்பினர் கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸார், மாணவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். 



ஆனால், கலைந்து செல்ல அவர்கள் மறுத்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனிடையே, மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக கோவை அரசு கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...