நீட் தேர்வுக்கு எதிராக அனைத்திந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் : 30க்கும் மேற்பட்டோர் கைது


நீட் விவகாரம் மற்றும் அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டம் 6-வது நாளாக இன்றும்(செப்.,7) நீடிக்கிறது. 



இந்த நிலையில், கோவை, ஹோப் காலேஜ் பகுதியில் கோவை - சேலம் நெடுஞ்சாலையில் எஸ்.எப்.ஐ., மாணவர்கள் அமைப்பினர் இன்று (செப்.,7) திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக எஸ்.எப்.ஐ., மாணவர்கள் அமைப்பினர் கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸார், மாணவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். 



ஆனால், கலைந்து செல்ல அவர்கள் மறுத்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனிடையே, மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக கோவை அரசு கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...