சோமனூர் பேருந்து நிலைய விபத்து- உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் அறிவிப்பு

கோவை மாவட்டம், சோமனூர் பேருந்து நிலையத்தில் இன்று மேற்கூரை இடிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்திற்காக காத்திருந்த கிட்டாம்பளையம் பகுதியைச் சேர்ந்த துளசிமணி (50), தனியார் கல்லூரியில் பயிலும் சோமனூர் பகுதியைச் சேர்ந்த மாணவி தாரணி (21), காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி (40), அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கதக்க ஒரு ஆண் மற்றும் அரசு பேருந்து நடத்துனர் சிவக்குமார் (43) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைதொடர்ந்து விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.   

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...