கோவையில் புளூ வேல் விளையாடிய பள்ளி மாணவர்: கவுன்சிலிங் கொடுக்கும் போலீசார்

சமீபத்தில் உலகம் முழுவதும் ‘புளூவேல்’ என்ற இணைய தள விளையாட்டு பரவியது. இதில், இளைஞர்களும், மாணவர்களும் தங்களை பதிவு செய்து விளையாடி வருகின்றனர். ‘புளூவேல்’ விளையாட்டில் 50 சவால்கள் அளிக்கப்படுகிறது.

ரயில் பாதையில் ரெயில் வரும் போது நின்று செல்பி எடுப்பது, பேய் படம், ஆபாச படம் பார்ப்பது, நடுநிசியில் மயானம் செல்வது என தினம் ஒரு சவால் விடுக்கப்படுகிறது. இந்த சவாலை செய்பவர்கள் அதனை இணையத்தில் பதிவு செய்கின்றனர். ஏற்கனவே, விளையாடுபவர்களை பற்றிய முழுமையான தகவல்களை விளையாட்டு நிர்வாகிகள் பெற்றுள்ளனர்.

50-வது நாள் விளையாடுபவர்கள் தற்கொலை செய்ய தூண்டப்படுகிறார்கள். அவர்கள் தற்கொலை செய்யாவிட்டால் அவர்களைப் பற்றிய ரகசியம் வெளியிடப்படும் என்று மிரட்டப்படுகின்றனர். இதற்கு பயந்து பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் ‘புளூவேல்’ விளையாட்டு அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

சமீபகாலமாக இந்த விளையாட்டு இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த விளையாட்டின் மூலம் இந்தியாவில் தற்கொலை அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை இரண்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

எனவே, ‘புளூவேல்’ விளையாட்டுகளால் மாணவ, மாணவிகளின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் போலீஸார் கவுன்சிலிங் அளித்து வருகின்றனர். மேலும், இந்த விளையாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் 104 என்ற உதவி எண்ணை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன ஒரு பகுதியாக, கோவையில் புளூவேல் விளையாட்டை  விளையாடிய பள்ளி மாணவர் ஒருவருக்கு போலீசார் கவுன்சிலிங் வழங்கி வருகின்றனர் அன்னூரை அடுத்த மூலகுரும்பபாளையம் பகுதியை சேர்ந்த 10 ம் வகுப்பு மாணவர், கடந்த சில தினங்களுக்கு முன் புளுவேல் விளையாட்டினை விளையாட தொடங்கியதாக தெரிகிறது.

பள்ளி மாணவர் இந்த விளையாட்டு செயலியை அறிந்த அன்னூர் போலீசார், அந்த மாணவர் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு அறிவுரை கூறி பாதிப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.  தொடர்ந்து, புளூ வேல் விளையாட்டை இனி விளையாட வேண்டாம் என்றும் கவுன்சிலிங் கொடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...