கோவையில் புளூ வேல் விளையாடிய பள்ளி மாணவர்: கவுன்சிலிங் கொடுக்கும் போலீசார்

சமீபத்தில் உலகம் முழுவதும் ‘புளூவேல்’ என்ற இணைய தள விளையாட்டு பரவியது. இதில், இளைஞர்களும், மாணவர்களும் தங்களை பதிவு செய்து விளையாடி வருகின்றனர். ‘புளூவேல்’ விளையாட்டில் 50 சவால்கள் அளிக்கப்படுகிறது.

ரயில் பாதையில் ரெயில் வரும் போது நின்று செல்பி எடுப்பது, பேய் படம், ஆபாச படம் பார்ப்பது, நடுநிசியில் மயானம் செல்வது என தினம் ஒரு சவால் விடுக்கப்படுகிறது. இந்த சவாலை செய்பவர்கள் அதனை இணையத்தில் பதிவு செய்கின்றனர். ஏற்கனவே, விளையாடுபவர்களை பற்றிய முழுமையான தகவல்களை விளையாட்டு நிர்வாகிகள் பெற்றுள்ளனர்.

50-வது நாள் விளையாடுபவர்கள் தற்கொலை செய்ய தூண்டப்படுகிறார்கள். அவர்கள் தற்கொலை செய்யாவிட்டால் அவர்களைப் பற்றிய ரகசியம் வெளியிடப்படும் என்று மிரட்டப்படுகின்றனர். இதற்கு பயந்து பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் ‘புளூவேல்’ விளையாட்டு அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

சமீபகாலமாக இந்த விளையாட்டு இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த விளையாட்டின் மூலம் இந்தியாவில் தற்கொலை அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை இரண்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

எனவே, ‘புளூவேல்’ விளையாட்டுகளால் மாணவ, மாணவிகளின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் போலீஸார் கவுன்சிலிங் அளித்து வருகின்றனர். மேலும், இந்த விளையாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் 104 என்ற உதவி எண்ணை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன ஒரு பகுதியாக, கோவையில் புளூவேல் விளையாட்டை  விளையாடிய பள்ளி மாணவர் ஒருவருக்கு போலீசார் கவுன்சிலிங் வழங்கி வருகின்றனர் அன்னூரை அடுத்த மூலகுரும்பபாளையம் பகுதியை சேர்ந்த 10 ம் வகுப்பு மாணவர், கடந்த சில தினங்களுக்கு முன் புளுவேல் விளையாட்டினை விளையாட தொடங்கியதாக தெரிகிறது.

பள்ளி மாணவர் இந்த விளையாட்டு செயலியை அறிந்த அன்னூர் போலீசார், அந்த மாணவர் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு அறிவுரை கூறி பாதிப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.  தொடர்ந்து, புளூ வேல் விளையாட்டை இனி விளையாட வேண்டாம் என்றும் கவுன்சிலிங் கொடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...