ஈஷா அவுட்ரீச்சின் இலவச கண்பரிசோதனை முகாம்

ஈஷா அவுட்ரீச், சோழா குழுமம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து ஈஷா யோகா மையத்திற்கு அருகில் உள்ள ஆலந்துறை அரசுப் பள்ளியில் இலவச கண்பரிசோதனை முகாம் நடத்தியது. 

இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கண் தொடர்பான குறைபாடுகளை பரிசோதனை செய்து கொண்டனர். இதில், 13 பேர் கண்புரைக்கான இலவச அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும், இந்த முகாமில் 20 பேருக்கு மிக குறைந்த விலையில் கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டது.

கடந்த ஜூன் 25-ம் தேதி ஈஷாவை அடுத்துள்ள செம்மேடு கிராமத்திலும், ஜூலை 16-ம் தேதி விராலியூர் கிராமத்திலும், ஜூலை 30-ம் தேதி மத்வராயபுரத்திலும் இதேபோன்ற கண்பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. 

கிராமபகுதிகளில் மக்களின் நலன்கருதி இதுபோன்ற கண்பரிசோதனை முகாம்கள் அடுத்தடுத்து நடக்கவிருப்பதாக இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...