தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் மேலும் ஒரு வருடம் நீட்டிப்பு

ரயில் நிலையத்தில் இருந்து தொலைவில் வசித்து வரும் பொதுமக்களுக்காக அருகிலுள்ள தபால் நிலையங்களிலே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நாட்டின் பல்வேறு இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தபால்துறை மற்றும் ரயில்வே துறை இணைந்து இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொண்டு வருகிறது. இந்த முன்பதிவு மையம் கோவையில் பாப்பநாயக்கன்புதுார் துணை தபால் நிலையத்தில், 2012ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 

இதில், ஓபன் டிக்கெட் தவிர்த்து மூத்த குடிமகன்கள், ஏ.சி., 2-ம் வகுப்பு, சாதாரண முன்பதிவு, தக்கல் உள்ளிட்ட டிக்கெட்கள் தபால் நிலையங்களில் முன்பதிவு செய்து தரப்படுகின்றன. சமீபகாலமாக இவ்வசதியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்ததை அடுத்து, மேலும் ஒரு வருடத்துக்கு தபால் நிலையங்களின் மூலம் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கோவை தபால் நிலைய அதிகாரி கூறுகையில், கோவையில் இச்சேவை பாப்பநாயக்கன்புதுார் துணை தபால் நிலையத்தில் மட்டும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. இச்சேவையை பயன்படுத்துவதற்கு பாப்பநாயக்கன்புதுார் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள் பலர் இங்கு காலை 9 மணி முதலே வருகை புரிகின்றனர். இதன்மூலம் எளிய முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவை செய்து கொள்கின்றனர். இதனால், நாளுக்கு நாள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கென ஆன்லைன் வசதி இருப்பினும், பெரும்பாலானோர் ஒரே சமயத்தில் பயன்படுத்தும்போது சர்வர் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. அச்சமயம் தபால்நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்போது விரைவில் சேவையை அளிக்க முடிகிறது. இவ்வசதியை அனைத்து தபால் நிலையங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...