தமிழகம் - கேரளா எல்லையில் மாவோயிஸ்ட் கைது


தமிழக கேரள கர்நாடக எல்லையான முச்சந்திப்பில் மாவோயிஸ்டுகள் இயக்கத்தை பலப்படுத்த மாவோயிஸ்டுகள் சமீப காலமாக முனைப்பு காட்டி வருகின்றனர். இதனை தடுக்க இரு மாநில போலீஸார் தீவிர தடுப்பு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த நவம்பரில் தமிழக கேரளா வனப்பகுதியான கேரள மாநிலம் நிலம்பூர் வனப்பகுதியில், தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது, மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த அஜிதா, குப்பு தேவராஜ் ஆகிய 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் தப்பி சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையேயான மோதல்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. 

இந்நிலையில், இன்று (21.09.2017) தமிழக கேரள எல்லையான ஆனைகட்டி அடுத்த அகளி வனப்பகுதியில் மவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நபரான காளிதாஸ் என்பவரை கேரள போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர் பரமக்குடியை சேர்ந்தவர் என்றும், இவர் கடந்த 2015ல் கேரள வனத்துறை அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் எனத் தெரிய வந்துள்ளது. 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...