டெங்கு மண்டலமாகும் கொங்கு மண்டலம்- கோவையில் ஒரேநாளில் இருவர் பலி


கோவையில் கடந்த சில மாதங்களாகவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 30-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.

இந்த நிலையில், கோவையில் இன்று ஒரே நாளில் இருவர் பலியான சம்பவம் டெங்கு குறித்தான அரசின் நடவடிக்கை மீது அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் முக்தி முண்டா (18). இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் கோவைக்கு மில் வேலைக்காக வந்தார். 

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மில் ஒன்றில் கூலி வேலை செய்து வந்த அவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முக்தி முண்டா-விற்கு மஞ்சள் காமாலை இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், அவரது உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்கையில் அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே முக்தி முண்டா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே, சிறுமுகை இரும்புப்பாறை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான காவேரி (25) கடந்த 10 நாட்களாக டெங்கு காய்ச்சலால் அவதியுற்று வந்துள்ளார். இதற்காக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார்.

கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தொடர்ந்து டெங்கு குறித்தான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், டெங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என அறிவித்து வரும் நிலையில், தொடர்ந்து கோவையில் டெங்குவினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் சம்பவம் பொதுமக்களிடையே அரசு நிர்வாகத்தின் மீது அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...