உடலை பலப்படுத்துவதற்காக, உயிரைப் பாதுகாக்க தவறும் நடைபயிற்சி செய்யும் மக்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மலைமாவட்டமான நீலகிரிக்கு மேட்டுப்பாளையத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து, கோத்தகிரி மற்றும் பர்லியாறு வழியாக என இரு சாலைகளில் உதகை செல்ல முடியும். இந்த இரு சாலைகளிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

மலைப்பகுதி என்பதால் வனவிலங்குகளின் நடமாட்டமும் மிகுந்து காணப்படும். குறிப்பாக மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் அடிக்கடி யானை, புலி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் சாலையில் உலா வருகின்றன. இதனால், அந்தப் பகுதியில் இருக்கும் குடியிருப்புவாசிகள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில், மிருகங்கள் நடமாடும் மேட்டுப்பாளையம் - கோத்தகிரி வனப்பகுதிகளில் உயிரைப் பொருட்படுத்தாமல் அப்பகுதி மக்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இதனால், மக்களை வனவிலங்குகள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு மேட்டுப்பாளையம் வனத்துறையினரின் சோதனை சாவடியில் இருந்து 5 கி.மீ தொலைவிற்கு பொதுமக்கள் நடந்து செல்ல மேட்டுப்பாளையம் செசன்ஸ் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல், தடை செய்யப்பட்ட பகுதிகளில் நடைபயிற்சி செய்வது ஆபத்தானது என்பதை மக்கள் உணர்வதில்லை. அவ்வாறு தடையை மீறுபவர்களை கண்டிக்கவோ, எச்சரிக்கை விடுக்கவோ வனத்துறை அதிகாரிகள் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுவரை, வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் வகையில் வனப்பகுதிக்குள் செல்லும் மக்களோ அல்லது விலங்குகளுக்கோ எந்த உயிர்சேதம் ஏற்படவில்லை. ஆனால், இதே நிலை தொடரும் பட்சத்தில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 

உயிரை பாதுகாத்துக் கொள்ள மறந்துவிட்டு, உடலை பலப்படுத்தும் மக்களிடையே, வனத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...