இந்துத்துவாவிற்கு எதிராக உள்ளதால்தான் கீழடி அகழ்வாராய்ச்சியை மத்திய அரசு முடக்குகிறது- சிபிஎம் மாநில செயலாளர் பேட்டி

பழங்கால தமிழகத்தில் சாதி, மதம் இல்லை என்பதை கீழடி ஆராய்ச்சி வெளிப்படுத்துவதாகவும், இந்துத்துவாவிற்கு எதிராக இது இருப்பதாலேயே அகழ்வாராய்ச்சியை கைவிட மத்திய அரசு முயல்வதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை காந்திபுரம் சிபிஎம் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

கீழடி மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் முடிந்த நிலையில், அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவு பெற்றது என மத்திய அரசு அறிவித்துள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சியை கைவிடும் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல. கீழடி அகழ்வாராய்ச்சி இந்துத்துவாவின் வரலாற்று பார்வைக்கு நேர்மாறாக இருக்கின்றது.

பழங்காலத்தில் சாதிகள் இல்லை என்பது கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்துத்துவாவின் பார்வைக்கு மாறான தகவல்கள் வெளியாவதன் காரணமாகவே பாஜக கீழடி அகழ்வாராய்ச்சியை கைவிடுகின்றது. அகழ்வாராய்ச்சியை மூடுவது என்ற மோசமான முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

கோவை மாநகராட்சியின் பொதுமக்களை பாதிக்கும் வகையிலான வரி வசூலை கைவிட வேண்டும். கோவையில் லாபகரமாக இயங்கும் மத்திய அரசின் அச்சகம் தொடர்ந்து இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தில்லியில் சிபிஎம் கட்சி அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்துவது என்பது சரியல்ல. 40 மாத கால ஆட்சியில் ஏற்பட்ட அதிருப்தியை திசை திருப்பவே பாஜக முயல்கின்றது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 85 பேர் வரை உயிரிழந்து இருப்பதோடு, ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் முறையாக இல்லாதது டெங்கு பரவும் காரணங்களின் ஒன்று. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், விளைநிலங்கள் வழியாக கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். கேரளாவை போல தமிழகத்திலும் கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...