கோவையில் உள்ள அணைகள் மற்றும் நீர்தேக்கங்களை ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை



ஜுலை மற்றும் செப்டம்பர் மாதம் வரையிலான முதல் பருவகால மழையானது, வெளுத்து வாங்கியதால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இருப்பினும், ஒரு சில அணைகளில் ஏற்பட்டுள்ள உடைப்புகளால் நீரை சேகரித்து வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கண்காணித்து, சரிசெய்ய வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மந்தமாக செயல்படுகின்றனர். இதனால், எதிர்வரும் மழைக்காலங்களில் அணைகளுக்கு வரும் நீரை சேகரித்து வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. 

குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகள் முறையான பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. எனவே, நகரில் உள்ள நீர்நிலைகளை சீர்செய்து, நீரை தேக்கி வைப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



இது தொடர்பாக சமூக வலைதளங்களுக்கு அளித்த பேட்டியில் சமூக ஆர்வலர் மணிகண்டன் பேசியதாவது, குறும்பபாளையம் அருகே உள்ள மதுக்கரை பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் இரண்டு ஏரிகள் உள்ளன. அறிவொளிநகர், பி.கே.புதூர், இடையர்பாளையம் மச்சம்பாளையம், சுந்தராபுரம், மைல்கல் மற்றும் குனியமுத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் நீர், பொதுப்பணித்துறையினரால் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிறு நீர்தேக்கங்கள் வழியாக ஏரிக்கு வந்தடைகிறது. 



நீர்தேக்கங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியதால், உடைப்பு ஏற்பட்டு நீர்தேக்கி வைக்க முடியாத நிலையில் உள்ளது. இதனை முறையாக பராமரித்தால், சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயத்திற்கு இந்த நீரை பயன்படுத்த முடியும். எனவே, உரிய நிதி ஒதுக்கி நீர்தேக்கங்கள் மற்றும் அணைகளை முறையாக பராமரித்து, எதிர்வரும் மழைக்காலங்களின் போது வரும் நீரை தேக்கி வைக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...