ஆனைகட்டி அருகே யானைகள் பயன்படுத்தும் வழித்தடங்கள் வேலியிட்டு அடைப்பு

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி வழியே உள்ள ஆலமரமேடு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சலிம் அலி பறவையியல் துறை மற்றும் இயற்கை வரலாறு மையப்பகுதி வழியாக வனப்பகுதிக்குள் இருக்கும் யானைகள் சாலைகளுக்கு வருகின்றன. இந்த நடைபாதையை பயன்படுத்தி ஆனைக்கட்டி, போளுவாம்பட்டியை இணைக்கும் சாலையை கடந்து சென்று அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நீர்தொட்டிகளில் நீர் குடிக்கச் செல்கின்றன. 

வறட்சி காலங்களில் எஸ்.ஏ.சி.ஓ.என். வளாகத்தை கடந்து அங்கு செயல்பட்டு வரும் செங்கல் சூளைகள் அருகே அமைக்கப்பட்டுள்ள நீர்தேக்கங்களில் யானைகள் நீர் குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.  மேலும், அந்த வழியாக யானைகள் நடமாட்டம் இருப்பதை அப்பகுதி மக்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்கின்றனர். 

அண்மையில் நீர் குடிப்பதற்காக சாலைக்கு வந்த யானைகள், அந்த வழியாக சென்ற வாகனங்களை துரத்தும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால், யானைகள் சாலைகளுக்கு வராதவாறு வேலிகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து சாலைகளுக்கு வர யானைகள் பயன்படுத்தும் வழித்தடங்களை தனியார் நிறுவனம் சார்பில் இரும்பு வேலியிட்டு அடைக்கப்பட்டுள்ளது. 



ஆனால், இந்தவேலியை யானைகள் எளிதில் உடைத்துவிடும் என்றும், இதுமாதிரியான தடுப்புகளை அமைப்பதினால், மற்ற பகுதிகளில் யானைகள் மோதல் போக்கில் ஈடுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கோவை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், வேலி அமைக்கப்பட்டுள்ள இடம் தனியாருக்கு சொந்தமானது எனவும், யானைகள் செல்வதற்கான சரியான பாதையை அமைத்து வேலியை கட்டுமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...