பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வாட்சாப் மூலம் பரப்பியவர் கைது

கோவையை சேர்ந்த பெண் ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை வாட்சாப் மூலம் பரப்பிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேந்தவர் சுப்ரமணியம். இவரது மகன் ரங்கநாதன் (36). இவருக்கு கோவையை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருடன் வாட்சாப் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பார்க்காமலே காதலித்து வந்தனர். தொடர்ந்து, பெண்ணிடம் ஆசை வார்த்தை பேசி அவரது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரங்கநாதன் பெற்றுள்ளார்.

இந்த சூழலில் ரங்கநாதனுக்கு முன்னதாகவே திருமணம் நடந்து விவாகரத்தானவர் என்பதும் தெரியவரவே சம்மந்தப்பட்ட பெண் ரங்கநாதனுடன் பேசுவதை தவிர்த்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ரங்கநாதன் அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்களை வாட்சாப் மூலம் பலருக்கு அனுப்பியுள்ளார்.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்-இடம் புகார் அளித்தார்.

புகரின் பேரில் வழக்குப்பதிவு சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் மல்லிகா இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.

அப்போது ரங்கநாதனுக்கு ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பு இருந்ததும், தற்போது பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வாட்சாப் மூலம் பரவவிட்டதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, ரங்கநாதன் மீது ஒருவரை தற்கொலைக்கு தூண்டுதல், பெண்ணின் கன்னியத்திற்கு இழுக்கு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ரங்கநாதனை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து செல்போன் மற்றும் சிம்கார்ட்-ஐ போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...