பட்டாசுகள் வெடிப்பதன் மூலம் பொதுச்சொத்துக்கு தீங்கு விளைவித்தால் வழக்கு பதிவு செய்யப்படும்- மாநகர காவல்துறை எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் வெடித்து பொதுச்சொத்துகள் மற்றும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவித்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு எந்த காரணத்தைக் கொண்டும் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கக் கூடாது. மருத்துவமனை, பெட்ரோல் பங்க், கல்வி நிலையங்கள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களின் அருகே மற்றும் மின் மாற்றிகள் அருகே பட்டாசு வெடிக்கக் கூடாது.

நெடுஞ்சாலைகள் உட்பட போக்குவரத்து உள்ள எந்த சாலைகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பட்டாசு வெடிக்கக் கூடாது.

அஜாக்கிரதையாகவும், குடிபோதையிலும் பட்டாசு வெடித்து பொதுச்சொத்துக்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும்.

சட்டவிதிகளுக்குட்பட்ட மேற்கண்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...