முறையாக ஊதியம் வழங்கக் கோரி கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்


கோவை அரசு மருத்துவமனை பாதுகாவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் முறையாக ஊதியம் வழங்கக் கோரி இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்மாவதி மருத்துவ மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த 1,300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதுகாவலர் மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு மாதம் தோறும் 8,200 ரூபாய் சம்பளம் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு 8,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதில் 1,000 ரூபாய் தொழிலாளர் வைப்பு நிதியாக பிடிக்கப்படுவது வழக்கம். விடுப்பு இல்லாமல் அனைத்து நாட்களும் எட்டு மணிநேரத்திற்கு ஒரு குழுவாக, மூன்று பிரிவுகளில் இவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் விடுப்பு எடுத்தால் ஐந்தாயிரம், நான்காயிரம் என முறையான கணக்கு இல்லாமல் ஊதியம் பிடித்து வழங்குவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் கூறுகையில், ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யும் தொகைக்கான வைப்பு நிதியின் கணக்கு எண்ணைக் கேட்டால் நிறுவனத்தினர் தவறான எண்ணை வழங்குகின்றனர். அந்த எண்ணில் வைப்புத்தொகை பூஜ்யம் என காட்டுகிறது. 

பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால், இன்று தங்களுக்கு பண்டிகைக்கால போனஸ் மற்றும் வார விடுமுறை, சம்பளத்தொகை அனைத்தையும் அச்சடித்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்து வேலையை புறக்கணித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டதில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.

இதனைத்தொடர்ந்து, ஒப்பந்த தொழிலாளர்களுடன் உதவி இருப்பிட மருத்துவ அதிகாரி மகேஷ்வரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில், பாதுகாவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு மற்றும் வைப்பு நிதி பிடித்தம் சம்பந்தமாக அனைத்து தகவல்களும் விரைவில் தரப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டி மருத்துவ மேலாண்மை நிறுவனம் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ்-வின் உறவினர் நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...