இரட்டை இலை சின்னம் வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி அணி வெற்றி பெறும் - துணை சபாநாயகர் தம்பிதுரை

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி அணி வெற்றி பெற்று, அச்சின்னத்தை பெறுவது உறுதி என அதிமுக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணி வெற்றி பெறும்.

பெரும்பான்மையான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்குமென்பது உறுதி. இன்று நடைபெறும் இந்த வழக்கில் தங்கள் தரப்பு வெற்றி பெறும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் ஆதரவு அரசிற்கு உள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் இந்த இயக்கம் செயல்படும்" என்றார்.

இதனைத்தொடர்ந்து, அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தம்பிதுரை செயல்படுகிறார் என்ற முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் குற்றச்சாட்டு குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு, பதிலளிக்க  தம்பிதுரை மறுத்து விட்டார்.

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...