திருச்சியில் இருந்து கிருஷ்ணராஜபுரத்திற்கு சிறப்புக் கட்டண ரயில் இயக்கம்


திருச்சி - கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) இடையே சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோரின் வசதிக்காக, திருச்சி - கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) இடையே சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர், நாமக்கல், சேலம் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. 

திருச்சியில் இருந்து நாளை (அக்.,17) காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் எண் - 06049, பிற்பகல் 2.30 மணியளவில் கிருஷ்ணராஜபுரம் சென்றடைகிறது. 

இதில், ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 17 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 2 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் என மொத்தம் 21 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயிலானது, குளித்தலை, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் பங்கராபேட்டை போன்ற நிறுத்தங்களில் நிறுத்தப்படும். திருச்சி - கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) ரயிலுக்கான முன்பதிவு இன்று மாலை 5.30 மணியில் இருந்து நடைபெற்று வருகிறது. 

இதேபோல, ரயில் எண் - 82638 கோவை - சென்னை இடையிலான சுவிதா சிறப்பு ரயில் (ஒருவழி) கோவையில் இருந்து வரும் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7.10 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் அதிகாலை 03.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைகிறது. 

இதில், ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 18 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 3 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் என மொத்தம் 23 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த ரயிலானது, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் நிறுத்தங்களில் நின்று செல்லும். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...