அனைத்து மாவட்டங்களிலும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டால் வரவேற்பேன் - திண்டுக்கல் சீனிவாசன்

கோவை, நவம்பர் 16: அனைத்து மாவட்டங்களிலும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டால் வரவேற்பேன் என்றும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் போது ஆளுநர் ஆய்வு நடத்தி இருந்தாலும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான கால்கோள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஆளுநர் ஆய்வு குறித்து உள்ளாட்சிதுறை அமைச்சரின் கருத்தே தனது கருத்து. தூய்மை இந்தியா திட்டத்தில் ஆளுநர் நல்ல பணிகளையே செய்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போதும் ஆளுநர் ஆய்வு நடத்தி இருந்தால் ஏற்று கொண்டிருக்க வேண்டும். 

அனைத்து மாவட்டங்களிலும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டால் வரவேற்பேன். அமைச்சர் இல்லாமல், அரசு அதிகாரிகளை வைத்து மட்டும் கூட்டம் நடத்தியதால் மாநில உரிமை பறிபோகாது. மத்திய அரசு திட்டத்தின் செயல்பாட்டையே ஆளுநர் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார். தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் வேறு மாநில ஆளுநராக இருந்த இடங்களில் இது போன்ற ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்றார்.

இதைத்தொடர்ந்து, பா.ஜ.க தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் அதிமுக கட்சி அழிந்துவிடும் என்றும், ஊழல் ஆட்சி எனக் கூறியிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அதிமுக கட்சியை யாராலும் அழிக்க முடியாது. இது மக்களுக்கான ஊழலற்ற ஆட்சி. எதிர்வினை ஆற்றும் அளவிற்கு அவர்கள் விமர்சனம் செய்யவில்லை. கட்சிகளை பற்றி சந்தர்பம் வரும்போது விமர்சனம் செய்வோம். இவ்வாறு கூறினார். 

கோவை ஆணைகட்டியில் உடல்நலம் குன்றிய யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை அனைத்து நடவடிக்கைகளும எடுத்த நிலையிலும், சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்திருப்பது இயற்கையானது என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...