பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானம்

திருப்பூர், நவம்பர்  24

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூரில்,  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் சுந்திரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் முருகேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் முதன்மை வகித்தனர். 

இதில்,  அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.  இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ஜேக்டோ ஜியோ செய்தித் தொடர்பாளர் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர் தியாகராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

 பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்திடவேண்டும், 6வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகள் களையப்பட்டு 7வது ஊதியக்குழு அமுல்படுத்தவேண்டும், கடந்த 2004 ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் 2006ம் ஆண்டு மே.31ம் தேதி வரை தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கிடவேண்டும்,தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர் பயிற்றுனர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்யவேண்டும், ஒளிவு மறைவற்ற முறையில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்திட வேண்டும். ஆண்டு முழுவதும் நடத்தப்படும் நிர்வாக மாறுதலை உடனடியாக நிறுத்த வேண்டும், 12 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவர்களுக்கு சத்துணவு வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

நிறைவாக நாமக்கல் மாவட்டச் செயலாளர் தண்டாயுதபாணி நன்றி கூறினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...