ஆர்கே நகருக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் - இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு


நவம்பர் 24 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, காலியாக உள்ள ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவால், சென்னை, ஆர்கே நகர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்தத் தொகுதிக்கு, ஏப்ரலில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்த வழக்கில், டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பக்கே கஸாங் மற்றும் லிகபல்லி, உத்தரபிரதேசத்தில் உள்ள சிகந்த்ரா, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சபாங் உள்ளிட்ட காலியானத் தொகுதிகளுக்கும் அதே நாளில் இடைத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட 5 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 27-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் டிசம்பர் 4-ம் தேதி ஆகும். டிசம்பர் 5-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களைத் திரும்ப பெற டிசம்பர் 7-ம் தேதி கடைசி நாளாகும். வாக்குகள் டிசம்பர் 24-ம் தேதி எண்ணப்படுகின்றன.

இந்த இடைத்தேர்தலின் போது யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் ஒப்புகை சீட்டுடன் கூடிய இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...