அதிக கட்டணம் வசூலிக்கும் மாநகராட்சி கட்டணக் கழிப்பிடம்- நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்

கோவை, டிசம்பர் 4

காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை, காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சியின் கட்டண கழிப்பிடம் குத்தகைதாரர் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் சார்பில் சிறுநீர், மலம் கழிக்க ரூ. 1 மற்றும் குளிக்க ரூ. 3 என வசூலிக்க வேண்டும் என அதன் அருகிலேயே அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதனை குத்தகைக்கு எடுத்துள்ள நபரோ மாநகராட்சி நிர்ணயித்துள்ள விலை பட்டியலை ஒரு அட்டையினைக் கொண்டு மறைத்து, அதற்கு மாற்றாக அதிகப்படியான தொகையை வசூலித்து வருகிறார். அதாவது, சிறுநீர் கழிக்க மட்டும் 5 ரூபாய் இங்கு வசூல் செய்யப்படுகிறது.



இதுகுறித்து, அங்கு பணியில் அமர்த்தப்பட்டிருந்த நபரிடம் கேள்வியெழுப்புகையில், "மாதம் 12 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும். மாநகராட்சி நிர்வாகமா அதனை செலுத்தும். இவ்வாறு அதிகத் தொகை வசூலித்தால் மட்டுமே அதனை செலுத்த முடியும். வேண்டுமென்றால் பயன்படுத்துங்கள், இல்லையென்றால் சாலையோரம் சென்று சிறுநீர் கழித்துக் கொள்ளுங்கள்" என்றார் கடும் கோபத்துடன்.

வாரம் தவறாமல் "அதிக தொகை வசூலித்த கட்டணக் கழிப்பிட குத்தகைதாரர் மீது நடவடிக்கை" என மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில் இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...