ஒகி புயல் பாதிப்பு குறித்து விரைவில் முழுமையான ஆய்வறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்

டிசம்பர் 14

தமிழகத்தில் ஏற்பட்ட ஒகி புயல் பாதிப்புகள் குறித்து விரைவில் முழுமையான ஆய்வறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

ஒகி புயல் பாதிப்பிற்குப் பிறகு, 400-க்கும் மேற்பட்ட மீனவர்களைக் காணவில்லை என உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது. ஒகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஓகி புயலால் காணாமல் போனவர்களின் இறுதி எண்ணிக்கையைத் தமிழக அரசு இதுவரை அளிக்கவில்லை என மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. வீடு வீடாகச் சென்று மீனவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், சேகரிக்கும் பணி முடிவடைந்தவுடன் இறுதி எண்ணிக்கை தெரியவரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒகி புயல் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ. 1,843 கோடி தேவை என மத்திய அரசிடம் கேரளா அரசு கோரிக்கை வைத்துள்ளது. கேரளாவின் கோரிக்கையை ஏற்று, ஆய்வு மேற்கொள்ள மத்தியக் குழுவை அனுப்புவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே, டெல்லி மாநில நிதி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிறகு அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-  தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த ஆய்வு நடைபெறுகிறது. விரைவில் முழுமையான ஆய்வறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். கடலில் தற்போது சீரான நிலை ஏற்பட்டுள்ளதால், மாயமான மீனவர்கள் மீண்டும் திரும்புவார்கள் என நம்பிக்கை. காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. 

தமிழகத்திற்கு ரூ.2,000 கோடியை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. மாலத்தீவில் மீனவர்கள் சிலர் கரை சேர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள், பணநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...