நச்சுத்தன்மை புகாரால் ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விநியோகத்தை நிறுத்த முடிவு?

நச்சுத்தன்மை கொண்ட மசூர் பருப்பால், பல்வேறு நோய்கள் வரக்கூடும் எனப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அதன் விநியோகத்தை நிறுத்த தமிழக உணவுத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நச்சுத்தன்மை கொண்ட மசூர் பருப்பால், பல்வேறு நோய்கள் வரக்கூடும் எனப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அதன் விநியோகத்தை நிறுத்த தமிழக உணவுத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழக அரசின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தில் உளுந்தம் பருப்பு வழங்கப்பட்டு வந்தது. பின்னர், தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக உளுந்தம் பருப்பு நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக மசூர் என்ற வகை பருப்பு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் ஆரம்பத்தில் மதிய உணவுத் திட்டத்துக்கு மசூர் பருப்பு பயன்படுத்தப்பட்டது. இந்தப் பருப்பைச் சாப்பிட்ட குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்பட்டதாகவும், முடக்குவாதம்போல கை, கால்களில் செயலிழப்பு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. அதன் காரணமாக, தமிழகத்தில் மசூர் பருப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாடு நுகர்வுப்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதனிடையே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் மசூர் பருப்பு கொள்முதலுக்கான டெண்டரை உணவுத்துறை வெளியிட்டு, ரேஷன் கடைகளில் பருப்பு விநியோகிக்கப்பட்டது. அதேவேளையில், இவ்வகை பருப்பில் அடர் சிவப்பு நிறத்தில் சேர்க்கப்படும் நிறமி நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும், இதனை விநியோகிக்கத் தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து, மசூர் பருப்பு கொள்முதலுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இந்த நிலையில் மசூர் பருப்பு நச்சுத்தன்மை கொண்டது எனவும், பல்வேறு நோய்கள் வரக்கூடும் எனவும் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, மசூர் பருப்பு விநியோகத்தை நிறுத்த தமிழக உணவுத்துறை முடிவு செய்துள்ளது புகார்கள் வருவதால், ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விநியோகத்தை நிறுத்தி விட்டு, துவரம் பருப்பு அல்லது கனடியன் லெண்டில் பருப்பு வழங்க முடிவு செய்து உள்ளதாக உணவுத்துறை தெரியவந்துள்ளது.

Newsletter

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...