கோவையில் முதல்நாள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு

கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் முதல்நாள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்தன. இதுவரை 126 பறவைகளின் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.



கோவை: கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் முதல்நாள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்தன. இதுவரை 126 பறவைகளின் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 




கோவை வனச்சரகப் பகுதிகளில் உள்ள 25 குளங்களில் வன அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சதுப்பு நிலங்களில் உள்ள பறவைகளை கணக்கெடுக்கின்றனர். இன்றும், நாளையும் நடக்கும் இந்தக் கணக்கெடுப்பில் பறவைகளின் இனங்கள் மற்றும் பறவைகளின் எண்ணிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. முதல் நாள் கணக்கெடுப்பின் போது, 126 பறவைகளின் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில், 48 இனங்கள் ஈரமான நிலத்தில் வாழ்பவையாகும். 78 இனங்கள் சதுப்பு நிலங்களில் வசிப்பவையாகும். அனைத்து குளங்களிலும் கணக்கெடுத்ததன் அடிப்படையில், முதல்நாளில் மட்டும் 6,620 பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.




அதிகபட்சமாக அச்சன்குளம் குளப்பகுதியில் மட்டும் 75 பறவைகளின் இனங்கள் கண்டறியப்பட்டன. இதேபோல, குறிஞ்சி குளப்பகுதியில் 884 பறவைகள் கணக்கிடப்பட்டன. 




முன்னதாக, இது தொடர்பான நிகழ்ச்சி தமிழ்நாடு வனத்துறை வளாகத்தில் நடைபெற்றது. அதில், பறவைகளை கணக்கெடுக்கும் தன்னார்வலர்களுக்கான விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள் வழங்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பு பணியின் நடுவே, சிறந்த புகைப்படங்களை எடுக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...