பாரதியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க 3 பேர் கொண்ட தற்காலிக குழு நியமனம்

துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் தலைமையில் 3 பேர் கொண்ட தற்காலிகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கோவை: துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் தலைமையில் 3 பேர் கொண்ட தற்காலிகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 



பேராசிரியர் நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சமாகக் கேட்டதாக சுரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு. அவர் பணம் பெறுவதற்கு புரோக்கர் போல் செயல்பட்டதாக பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கணபதியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியபோது தடயங்களை அழிக்க முயன்றதாக அவரது மனைவி சொர்ணலதாவும், அவரது உறவினரும், பல்கலைக்கழக ஊழியருமான மதிவாணன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதனிடையே, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உயர்கல்வித் துறை செயலர் தலைமையில் ஆட்சிமன்றக் குழு கூட்டம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று கூடியது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் தலைமையில் 3 பேர் கொண்ட தற்காலிகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் சிண்டிகேட் உறுப்பினர்களான பேராசிரியர்கள் ஜெயக்குமார், திருநாவுக்கரசு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

கூட்டத்திற்குப் பிறகு முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், துணை வேந்தர் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை. லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கையே திருப்திகரமாக உள்ளது. துணைவேந்தர்களின் முறைகேடுகளை தடுக்கும் வகையில் மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படும் முறைகளை கருத்தில் கொண்டு பரிசீலனை செய்ய வேண்டும். துணைவேந்தர் முறைகேடுகளை தடுக்க மேல்மட்டத்தில் இருந்தே சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். துணைவேந்தர் நியமனத்தில் அரசு மற்றும் அமைச்சர் தலையீடு இல்லை. 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் மீது முறைகேடு புகார்கள் எழுகின்றன. அந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயக்கம் காட்டியதில்லை. பல்கலைக்கழகங்களில் தணிக்கை தடைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கணபதியைத் தொடர்ந்து, லஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கியுள்ள பேராசிரியர் தர்மராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை இன்று தேர்வு செய்யப்பட்ட தனது தலைமையிலான நிர்வாக குழு பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும். எனது தலைமையிலான அந்தக் குழுவில் பேராசிரியர்கள் ஜெயக்குமார், திருநாவுக்கரசு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு நிர்வாக குழுவாக செயல்படுவர். துணைவேந்தருக்கான அதிகாரங்கள் இந்தக் குழுவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...