பிடிவாரண்ட்டைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரானார் சரிதா நாயர் : வழக்கு விசாரணை பிப்., 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

காற்றாலை அமைத்துத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக நடிகை சரிதா நாயர் மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராஜவேலு உத்தரவிட்டார்.

கோவை : காற்றாலை அமைத்துத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக நடிகை சரிதா நாயர் மீது தொடரப்பட்ட  வழக்கில் விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராஜவேலு உத்தரவிட்டார்.  

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் திரைப்பட நடிகை சரிதா நாயர். இவர், கடந்த 2009-ம் ஆண்டு கோவை வடவள்ளி பகுதியில் ‘ஐ.சி.எம்.எஸ்' என்ற பெயரில் காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்து வந்தார்.

நிறுவனங்களில் காற்றாலை அமைத்துத் தருவதாக கூறி கோவையை சேர்ந்த தியாகராஜன் எனபரிடம் ரூ.28 லட்சம் , ஊட்டியைச் சேர்ந்த வெங்கட்ரமணன் மற்றும் ஜோயோ ஆகியோரிடம் ரூ.5.50 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதன்பேரில், சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், அவரது மேலாளர் ரவி ஆகியோர் மீது போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை ஜே.எம்.6 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இவ்வழக்கு  விசாரணைக்காக ஆஜராகும்படி தொடர்ந்து 4 முறை சம்மன் அனுப்பியும் சரிதா நாயர் மற்றும் மேலாளர் ரவி ஆகியோர் ஆஜராகவில்லை. 

இதனால்,சரிதாநாயர் மற்றும் ரவி இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தும், நீதிபதி ராஜவேல் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் சாரதா நாயர் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். 

Newsletter

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...