தமிழக சட்டப் பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு : தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள் புறக்கணிப்பு

தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது.

தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் இன்று திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு, இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்கக்கூடாது என தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தன. படத்திறப்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தன.

இந்த நிலையில், ஜெயலலிதா படத்திறப்பு விழா சட்டப்பேரவையில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் முன்னிலையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். விழாவில், அ.தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

ஜெயலலிதா படத்தை திறப்பதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி விழாவில் பங்கேற்கவில்லை. படத்திறப்புக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் விழாவிற்கு வரவில்லை. சட்டப்பேரவையில் காந்தி, பெரியார், அண்ணா உள்ளிட்ட 10 தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், 11-வது தலைவராக ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றுள்ளது. சட்டப்பேரவையில் இடம்பெறும் முதல் பெண் தலைவர் படம் இது ஆகும். 7 அடி உயரம், 5 அடி அகலம் கொண்ட இந்தப் படத்தை கவின் கலைக்கல்லூரி முன்னாள் முதலமைச்சர் மதியழகன் வரைந்துள்ளார். பச்சை நிற சேலையுடன் ஜெயலலிதா நிற்பது போன்று வரையப்பட்டுள்ள இந்தப் படத்தில், ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என எழுதப்பட்டுள்ளது.

Newsletter

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...