ஏ.டி.எம். கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளிக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

கோவையை அடுத்த பீளமேடு பகுதியில் 3 வங்கிகளின் ஏடிஎம்கள் உடைக்கப்பட்டு ரூ.30 லட்சம் கொள்ளை போன வழக்கில் கைது செய்யப்பட்ட, கும்பல் தலைவனை 3 நாட்கள் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.


கோவை : கோவையில் அரங்கேறிய ஏ.டி.எம். கொள்ளை தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பீளமேடு பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு 3 வங்கிகளின் ஏ.டி.எம்.கள் உடைக்கப்பட்டு ரூ. 30 லட்சம் கொள்ளை போனது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார்,தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், கொள்ளை வழக்கு தொடர்பாக அரியானாவை சேர்ந்த கொள்ளையர்கள் 8 பேரை, நாமக்கல் அருகே வாகன சோதனையின்போது போலீசார் கைது செய்தனர். ஒரு லாரி, 2 கார்கள், ரூ.3 லட்சம் பறிமுதல் செய்தனர். இவர்களிடம் விசாரிக்கையில், ஏ.டி.எம். கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட கும்பல் தலைவன் அரியானாவை சேர்ந்த இஸ்லாமுதீன்(43) என்பதும், கொள்ளை பணத்தை அவனிடம் கொடுத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து, கடந்த 2ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பதுங்கி இருந்த இஸ்லாமுதீனை தனிப்படை போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்தனர். பின்பு ஜே.எம்.6  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ஏ.டி.எம். கொள்ளைக்கு தலைவனாக செயல்பட்ட இஸ்லாமுதீனை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிகோரி நீதிமன்றத்தில் போலீசார் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ராஜவேலு முன்னிலையில்  நடந்தது. விசாரணைக்கு பிறகு 3 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்தும், வரும் 15ம் தேதி மாலை 5.30 மணிக்குள் இஸ்லாமுதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...