இயற்கை மரணமடைந்த தாயின் உடலை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கிய சமூக ஆர்வலர்

கோவையை அடுத்த குனியமுத்தூர் பகுதியில் இயற்கை மரணமடைந்த தனது தாயின் உடலை சமூக ஆர்வலர் ஒருவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளார்.

கோவை : கோவையை அடுத்த குனியமுத்தூர் பகுதியில் இயற்கை மரணமடைந்த தனது தாயின் உடலை சமூக ஆர்வலர் ஒருவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளார். 

குனியமுத்தூர் பகுதியைச்சேர்ந்தவர் ராஜா சேது முரளி. இவர் பசியாற சோறு என்ற அமைப்பை ஏற்படுத்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் தங்கியிருப்பவர்களுக்கு தினமும் மதியம் இலவசமாக உணவு வழங்கி வருகிறார். மேலும் அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கான சீருடைகள்,பேனா பென்சில் உட்பட பல பொருட்களையும், வசதியற்ற ஏழைக் கர்ப்பிணிப்பெண்களுக்கு இலவசமாக வளைகாப்பு செய்து பண உதவியும் அளித்து வருகிறார். 

இந்நிலையில், இவரது தாயார் வள்ளியம்மாள் (82), வயது முதிர்வு காரணமாக இயற்கை மரணமடைந்தார். இதனையடுத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரது தாயார் உடலை தானமாக வழங்கினார். 2013 ஆம் ஆண்டு உடல் தானம் செய்ய பதிவு செய்து இன்று வழங்கியிருக்கிறார். 

இதுகுறித்து ராஜா சேது முரளி கூறுகையில்,, 2013 ஆம் ஆண்டு உடல் தானம் செய்ய பதிவு செய்யப்பட்டதாகவும், தன்னுடைய தாய் வள்ளியம்மாள் இயற்கை மரணமடைந்ததை அடுத்து அரசு மருத்துவக்கல்லூரி அவரது தாயார் உடலை தானமாக இன்று ஒப்படைத்ததாக கூறினார். 

மேலும், அனைவரும் உடல் தானம் செய்ய முன் வர வேண்டும் என்றும் மண்ணுக்கும், தீக்கும் இரையாகும் உடலை மருத்துவ மாணவர்களின் உடற்கூறியல் கல்விக்கு தானமாக கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Newsletter

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...