சீரமைக்கப்படாத சாலையால் சிரமப்படும் மக்கள்

உதகையில் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலைகளால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நீலகிரி: தொட்டபெட்டா பஞ்சாயத்து மற்றும் உதகை நகராட்சி ஆகிய இரண்டு நிர்வாகதிற்குட்ப்பட்டது குளிச்சோலை கிராமம். இப்பகுதியில் கேரட், உருளை கிழங்கு, பீட்ரூட், முட்டை கோஸ் ஆகியவற்றை விவசாயம் செய்வது விவசாயத் தொழில் பிரதானமாக உள்ளது. 

உதகையிலிருந்து பிங்கர் போஸ்ட் வழியாகவும், புதுமந்து வழியாகவும் இந்த கிராமத்தை அடைவதற்கான வழிதடங்கள் உள்ளன. ஆனால், குளிச்சோலை பிரிவிலிருந்து பிங்கர் போஸ்ட் சாலையையே அப்பகுதி மக்கள் பிரதான சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக இந்த பிரதான சாலை முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் இந்த கிராமத்தில் வசிக்கும் கிராம மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசய பொருட்களை வாங்க வேண்டுமானால் உதகை நகருக்கு தான் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் போது வயதானவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், " கர்ப்பிணி பெண்கள் மற்றும் உடல் நலக் குறைவால் அவசர சிகிச்சைக்காக வருபவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். 

அபாயம்

சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவற்றை தவிர்க்க வாகனங்களை சாலையின் ஓரங்களில் இயக்குவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மழை காலங்களில் மழை நீர் தேங்கியும், சேறும் சகதியுமாக மாறி விடுவதாலும், வெயில் காலங்களில் புழுதிகள் பரப்பதாலும் பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.



குறிப்பாக சீசன் காலங்கள் மற்றும் அவசர கால நேரங்களில் இந்த கிராம சாலை வழியாக உல்லத்தி, காரபிள்ளு, கவரட்டி, தாவனே, கடனாடு, தேனாடு கம்பை, பெந்தட்டி, சின்னகுன்னூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை இணைக்கும் சாலையாகவும் இந்த சாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

விடுமுறை நாட்களின் போது உதகை நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் தற்போது கூடலூர் மார்க்கமாக வரும் வாகங்கள் இந்த சாலையை பயன்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 



இதேபோல் கூடலூரில் இருந்து முதுமலை, கல்லட்டி வழியாக வந்தால் உதகை நகரை தொடாமல் கோத்தகிரி வழியாக சமவெளி பிரதேசங்களுக்கும் செல்ல கூடிய இந்த சாலை மிகவும் மோசமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு இந்த சாலை பெரும் சவாலாக உள்ளது." என்றனர்.

எனவே இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம், மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த கிராம சாலை நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்களில் கீழ் இயங்குவதால் இரண்டு நிர்வாகங்களும் அலட்சியப் போக்கு காட்டுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Newsletter

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...