ரேஷன் கடையிலேயே பிளாஸ்டிக் அரிசி..! : அலறும் மக்கள்

திருப்பூரில் உள்ள நியாய விலைக் கடை ஒன்றில் பிளாஸ்டிக் அரசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அதிகாரி இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

திருப்பூர்: திருப்பூரில் உள்ள நியாய விலைக் கடை ஒன்றில் பிளாஸ்டிக் அரசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அதிகாரி இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

திருப்பூர் 48-வது வார்டு சூசையாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயமேரி. இவர் தனது மகன் ராஜாவுடன் வசித்து வருகிறார். 



மாற்றுத்திறனாளியான ராஜா அதேபகுதியில் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் பணிசெய்து வருகிறார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் ரூ.1,220 மதிப்புள்ள  25 கிலோ பொன்னி புழுங்கல் அரிசி மூட்டை இரண்டு வாங்கியுள்ளனர்.



இதனிடையே நியாய விலைக் கடையில் வாங்கிய அரிசியை சமைப்பதற்கு தண்ணீரில் போட்டு வேக வைத்த போது கால்பங்கு அரிசியானது தண்ணீரில் மிதந்துள்ளது. இருப்பினும் அரிசியை வேக வைத்து பார்த்த போது பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்திருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து, அரிசியை உருண்டை செய்து , தீயில் காட்டியுள்ளார். அப்போது அரிசி உருண்டை தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. அதே போல் அரிசியை உருட்டி சுவற்றில் அடித்த போது உடையாமல் கல் போல் இருந்ததைக் கண்ட ஜெயமேரி இது குறித்து நியாய விலை கடையில் பணியாற்றும் ஊழியரிடம்  கேட்டுள்ளார், அதற்கு, "இது தரமான அரிசி என்றும், வாங்கிச் சென்ற அரிசியை மாற்ற முடியாது" என்றும் கடை ஊழியர்கள் கூறியுள்ளனர். 



இது தொடர்பான புகாரின் பேரில் உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அதிகாரி முருகேஷ் இன்று அந்த நியாய விலைக் கடையில் ஆய்வு நடத்தியுள்ளார். 

நியாய விலைக் கடைகளிலேயே பிளாஸ்டிக் அரசி விற்பனைக்கு வருவது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...