வால்பாறையில் சிக்கிய சிறுத்தையை வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறையினர்

கோவை மாவட்டம் வால்பாறையில் கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்ட சிறுத்தையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்ட சிறுத்தையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். 



வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட்டில் கடந்த 8-ம் தேதி மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முத்தலி என்பவரின் 4 வயது மகன் செய்துலை சிறுத்தைப்புலி இழுத்துச் சென்று கொன்றது. இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் குழந்தையை கொன்ற சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். வனத்துறையினர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிறுவனை தாக்கிக் கொன்ற சிறுத்தைப்புலியை பிடிப்பதற்கு 4 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. 

நடுமலை எஸ்டேட் உயிரிழந்த சிறுவனின் வீட்டிற்கு அருகாமையில் ஒரு கூண்டும், வால்பாறை சி.எஸ்.ஐ. ஆலயம் அருகாமையில் ஒரு கூண்டும், வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகாமையில் நல்லகாத்து சாலையில் ஒரு கூண்டும், காமராஜர் நகர் பகுதியில் ஒரு கூண்டும் என நான்கு கூண்டுகள் வைத்து 4 கேமராக்கள் பொருத்தி இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.



இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் சிறுவனை தாக்கிக் கொன்ற சிறுத்தைப்புலி நடுமலை எஸ்டேட்டில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுவனின் வீட்டிற்கு அருகாமையில் வைக்கப்பட்டிருந்த கூண்டிற்குள் சிக்கியது. இதனால், பொதுமக்கள் அனைவரும் நிம்மதியடைந்தனர். உடனே மாவட்ட வன அலுவலர் முகமது மனாப் (பொறுப்பு), வனத்துறை அதிகாரிகள் சக்திவேல் மற்றும் சேகர், ஓய்வுபெற்ற வனஅலுவலர் தங்கராஜ் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள், வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் சிறுத்தை பிடிபட்ட இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர், ஓய்வு பெற்ற வனஅலுவலர் தங்கராஜ் பிடிபட்ட சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறை வாகனத்தில் ஏற்றினர். நடுமலை எஸ்டேட்டில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட மந்திரி மட்டம் என்ற அடர்ந்த வனப்பகுதிக்குள் பிடிபட்ட சிறுத்தைப்புலியை கொண்டு சென்று விட்டனர். இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...