நிலவருவாய் ஆய்வாளருக்கு தகவல் பலகையில் கோரிக்கை விடுத்த இளைஞர்

திருப்பூரில் நிலவருவாய் ஆய்வாளர் அலுவலரை ஒன்றரை மாதங்களாக பார்க்க முடியாததால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக அலுவலக தகவல் பலகையில் எழுதிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : திருப்பூரில் நிலவருவாய் ஆய்வாளர் அலுவலரை ஒன்றரை மாதங்களாக பார்க்க முடியாததால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக அலுவலக தகவல் பலகையில் எழுதிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.



அனுப்பர்பாளையத்தை அடுத்த ஆத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் மதன் (29). இவர் அந்தப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு மதனின் தந்தை மகேந்திரன் இறந்துவிட்டார். இதனால், வாரிசு சான்றிதழ் கோரி வேலம்பாளையம் கிராமநிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்ற மதன், பின்னர் வேலம்பாளையம் நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதற்காக அவர் ஒன்றரை மாதங்களாக பலமுறை நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. 

ஆனால், அங்கு நிலவருவாய் ஆய்வாளர் இல்லாததால் அவரை சந்தித்து விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கவில்லை எனத் தெரிகிறது. 

இந்த நிலையில், காலை வழக்கம்போல மதன் நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்றபோது, வருவாய் ஆய்வாளர் அங்கு இல்லாததால் ஆத்திரமடைந்துள்ளார். அங்குள்ள தகவல் பலகையில் நிலவருவாய் ஆய்வாளர் அதிகாரி அவர்களே, இன்றோடு எட்டாவது நாள் உங்களைப் பார்க்க வருகிறேன். நீங்கள் அலுவலகத்தில் இருப்பதில்லை. நீங்கள் வரும் நேரத்தை எழுதி வைத்தால் மக்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படுமே. இப்படிக்கு நீங்கள் வாங்கும் சம்பளத்தை வரியாக அளிக்கும் இந்திய குடிமகன் என்று எழுதி வைத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவம் அந்த நேரத்தில் நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்ற பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, இந்த தகவல் அறிந்த உடன் அந்த தகவல் பலகையில் எழுதப்பட்டிருந்தது அழிக்கப்பட்டது. மேலும், உடனடியாக அதே பலகையில் ஆர்.ஐ. வருகை 5 மணிக்கு என்று எழுதப்பட்டது. சிறிது நேரத்தில் அலுவகத்திற்கு வந்த நிலவருவாய் ஆய்வாளர் ராசு, மதனை அழைத்து உடனடியாக வாரிசு சான்றிதழ் வழங்கினார். 

இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் ராசு கூறியதாவது :- திருப்பூர் வடக்கு தாலுகாவுக்குட்பட்ட வேலம்பாளையம், செட்டிபாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம் ஆகிய 4 கிராமங்களுக்கு ஒரு வருவாய் ஆய்வாளர் என்பதால் பெரும்பாலும் களப்பணி தொடர்பாக வெளியில் செல்வது வழக்கம். மேலும், கடந்த சில நாட்களாக அலுவலக ரீதியாக பயிற்சிக்கு சென்றுவிட்டதால் அலுவலகத்திற்கு வரமுடியவில்லை. வாரிசு சான்றிதழுக்காக விண்ணப்பித்த மதன் இன்றுதான் விண்ணப்பத்தையே என்னிடம் கொடுக்கிறார். மேலும், அவருடைய தந்தை மகேந்திரனின் பெயரை நேற்றுதான் குடும்ப அட்டையில் இருந்து நீக்கி உள்ளார். அப்படி இருக்கும்போது எப்படி அவர் கடந்த 1 1/2 மாதங்களாக சான்றிதழுக்காக விண்ணப்பிக்க முடியும். என்றார். இந்த சம்பவம் காரணமாக நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...