சாலை விபத்தில் இளைஞர்கள் பலி

மேட்டுப்பாளையம் அருகே தனியார் பேருந்து, இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.



மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே தனியார் பேருந்து, இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவரின் மகன் தமிழரசன் (29). இவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் தனது நண்பரான பினேஸ் (28) என்பவருடன் வெளியில் சென்றுவிட்டு நள்ளிரவு மேட்டுப்பாளையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் காரமடை அருகே  காந்திநகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். 

காரமடை ஆசிரியர் காலனி அருகே சென்று கொண்டிருந்த போது கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அசுர வேகத்தில் வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த தமிழரசன் மற்றும் பீனேஸ் இருவரும் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காரமடை காவல்துறையினர் ஒட்டுநர் மதியழகனை தேடி வருகின்றனர். விபத்திற்கு பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டு வந்ததே காரணம் என குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள் மேட்டுப்பாளையம் கோவை சாலையில் அதிக வேகமாக தொடர்ந்து இயக்கப்படும் தனியார் பேருந்துகள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

உயிரிழந்த பினேஸ் என்பவருக்கு அன்மையில் திருமணமாகிய நிலையில் அவரது மனைவிக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதமே ஆவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...