தொழில் முனைவோர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பல்துறை உரிமங்கள் பெற்றுத் தருவது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை: சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பல்துறை உரிமங்கள் பெற்றுத் தருவது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 



தமிழ்நாடு தொழில்நிறுவன வசதி அமைப்பு அவசர சட்டம் 2017-ஐ தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அவசர சட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பல்துறை உரிமங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சம்மந்தப்பட்ட துறைகளிடமிருந்து  மாவட்ட அளவிலான ஒற்றைச் சாளர இடர் நீக்க வசதி அமைப்பு குழு மூலம் விரைந்து பெற்று தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட முறைகளை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் கொண்டு சேர்க்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசுகையில், "கோயம்புத்தூர் மாவட்ட அளவிலான வசதி அமைப்பு குழு மாதத்திற்கு இரண்டு முறை கூடி மாவட்டத்தில் புதிதாக தொழில் துவங்க உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அனுமதிகளை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பெற்றுத்தரும். மேலும், இந்த அவசர சட்டத்தின் படி, தகுதியான தொழில் நிறுவனங்களுக்கு காலக்கெடுவுக்குள் ஒப்புதல் வழங்காத துறைகள் மீது அதிகபட்சம் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும். தவறான தகவல் அளித்து விண்ணப்பம் அளிக்கும் தொழில் நிறுவனத்தின் மீது ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும்." என்றார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...