கர்நாடக எல்லையில் தணிந்தது பதற்றம் : வழக்கம்போல லாரி, வாகனங்கள் இயங்கத் தொடங்கின

தமிழக - கர்நாடக எல்லையான ஓசூர் மற்றும் அத்திப்பள்ளியிலும் பதட்டம் தணிந்து உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு வாகன போக்குவரத்து தொடங்கியது.

தமிழக - கர்நாடக எல்லையான ஓசூர் மற்றும் அத்திப்பள்ளியிலும் பதட்டம் தணிந்து உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு வாகன போக்குவரத்து தொடங்கியது.

காவிரி நதிநீர் பிரச்சினையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில், கர்நாடக அரசுக்கு ஆதரவாக சில அம்சங்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக மாநில பாசனத்துக்கு கூடுதல் நீர் திறக்கவும், பெங்களூரூ குடிநீர் திட்டத்துக்கு காவிரி ஆற்று தண்ணீரை பயன்படுத்திக்கொள்ளவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. தமிழகத்துக்கு தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. இந்தத் தீர்ப்பை கர்நாடகமும், கன்னட அமைப்புகளும் வரவேற்று உள்ளன.

இதனால், கர்நாடக மாநிலத்திலும், தமிழக - கர்நாடக எல்லையான ஓசூர் மற்றும் அத்திப்பள்ளியிலும் பதட்டம் தணிந்து உள்ளது. இதனால் இன்று காலை 11 மணிக்குப்பிறகு தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு வாகன போக்குவரத்து தொடங்கியது. ஓசூரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கர்நாடக பதிவெண் கொண்ட லாரிகள், ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் கர்நாடக மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட்டன.

இதேபோல, அத்திப்பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டன. தமிழக அரசு மற்றும் கர்நாடக அரசு பேருந்துகள் மட்டும் இன்னும் ஓசூர்- பெங்களூரூ இடையே ஓடவில்லை. பேருந்து போக்குவரத்தும் இன்று மாலை முதல் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இரவு 11 மணி முதல் பேருந்துகள் ஓசூர்-பெங்களூரூ இடையே ஓடாமல் ஓசூரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...