மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் தாழ்த்தப்பட்ட மக்களை சென்றடைகிறதா..?

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை சென்றடைகிறதா எனத் தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் நல ஆணையம் கண்காணித்து வருவதாக ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் தெரிவித்தார்.

திருப்பூர்: மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை சென்றடைகிறதா எனத் தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் நல ஆணையம் கண்காணித்து வருவதாக ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் தெரிவித்தார். 



 

மங்களம் சாலையில் உள்ள கே.வி.ஆர் நகர் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் மனு வாங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், தேசிய தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள்நல ஆணையத்தின் தேசிய துணைத்தலைவர் முருகன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனு பெற்றனர். 



பின்னர் செய்தியாளர்களிடம் துணைத்தலைவர் முருகன் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அறிவித்து வழங்கியுள்ள நலத்திட்டங்கள் சரியான முறையில் அவர்களை சென்றடைகிறதா என தேசிய தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் ஆணையம் கண்காணித்து வருகிறது. நேற்றைய தினம் காஞ்சிபுரம் பகுதியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த மக்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப் பரிந்துரை செய்துள்ளது. மேலும், இறந்தவர்களில் இரண்டுபேர் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதால் அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

Newsletter

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...