கணவர் மரணத்தில் மர்மம் : முறையாக விசாரணை நடத்தக்கோரி பெண் புகார்

கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

திருப்பூர்: கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். 



திருப்பூர் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். லாரி ஓட்டுநர். இவர் கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி குன்னத்தூர் பகுதியில் சீட்டு விளையாடச் சென்றதாகவும், அப்போது கிணற்றில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.இது தொடர்பாக குன்னத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில் இறந்துபோன குமாரின் மனைவி சித்ரா திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்தார். அதில் "என் கணவர் குமார் கடந்த 11-ம் தேதி புதிய லாரி வாங்குவதற்காக ரூ.2,40,000 பணம், 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் 1 பவுன் மோதிரம் ஆகியவற்றுடன் வீட்டிலிருந்து புறப்பட்டார். 

அவருடன் அவரது நண்பர்கள் ராஜ், சாமி, பிரகாஷ் ஆகியோரும் சென்றதாகவும். நீண்டநேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவருடைய செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன். ஆனால், அவர் எடுக்கவில்லை. இந்த நிலையில்,12-ம் தேதி அவரது நண்பர் ராஜ் என்னை அழைத்து குமார் கிணற்றில் விழுந்து இறந்து விட்டதாகக் கூறினார். 

இதுகுறித்து குன்றத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் தவமணி வழக்குப் பதிவு விசாரணை நடத்து வருகிறார். இறந்து போன எனது கணவரின் மரணத்தில் மர்மம் உள்ளது. அவர் கொண்டு போன பணம், நகை குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை. அவரது நண்பர்களிடம் இதுகுறித்து விசாரிக்க வேண்டும். மேலும் குன்னத்தூர் காவல் ஆய்வாளர் தவமணி வழக்கை முறையாக விசாரிக்காததால் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...