ஆட்டோமேட்டிக் வாட்டர் மீட்டர் கருவிகளை ஆய்வுசெய்த மாநகராட்சி ஆணையர்

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், குடிநீர் உபயோகத்தை அளவீடு செய்வதற்காக புதிதாகப் பொருத்தப்பட்டுள்ள ஆட்டோமேட்டிக் வாட்டர் மீட்டர் கருவிகளை மாநகராட்சி ஆணையர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை : கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், குடிநீர் உபயோகத்தை அளவீடு செய்வதற்காக புதிதாகப் பொருத்தப்பட்டுள்ள ஆட்டோமேட்டிக் வாட்டர் மீட்டர் கருவிகளை மாநகராட்சி ஆணையர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



கோவை மாநகராட்சியில் பழைய 60 வார்டுகளில் வாட்டர் மீட்டர்கள் பொருத்தப்பட்டு, குடிநீர் உபயோக அளவீடுகள் கணக்கீடு செய்யப்பட்டு அதனடிப்படையில் குடிநீர் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த முறையில் ஏற்படும் தாமதத்தை தடுக்கும் பொருட்டு நவீன ஆட்டோமேட்டிக் வாட்டர் மீட்டர் கருவிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுவதற்குத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக மத்திய மண்டலம் வார்டு எண் 73-க்குட்பட்ட 1,131 குடிநீர் இணைப்புகளுக்கு புதிய வாட்டர் மீட்டர் கருவிகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த ஆட்டோமேட்டிக் வாட்டர் மீட்டர் கருவிகள் மூலம் குடிநீர் உபயோகிக்கும் அளவு துல்லியமாக கணக்கிடப்பட்டு, இணைப்புதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்கள் அனுப்பப்படும். மேலும், மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் அலுவலகத்திலிருந்தே இணையதளம் மூலம், ஒவ்வொரு குடிநீர் இணைப்பிற்கும் மாதம் மற்றும் நாட்கள் வாரியாக எவ்வளவு குடிநீர் உபயோகத்தப்பட்டுள்ளது என்ற தகவலை அறிந்து கொள்ளலாம்.

இன்று நடைபெற்ற ஆய்வின் போது, மத்திய மண்டலம் வார்டு எண். 73-க்குட்பட்ட அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் புதிய  வாட்டர் மீட்டர் கருவிகள் பொருத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு ஆணையாளர், மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி செயற்பொறியாளர் ஞானவேல், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...