கோவை - மத்தியபிரதேசம் இடையிலான அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் அறிவிப்பு

போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளின் வசதிக்காகவும் கோவை - ஜபால்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை : போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளின் வசதிக்காகவும் கோவை - ஜபால்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

ரயில் எண் - 02197 கோவை - ஜபால்பூர் (மத்தியபிரதேசம்) வாராந்திர அதிவேக சிறப்புக் கட்டண ரயில் வரும் ஏப்ரல் 09-ம் தேதி முதல் ஜுன் 04-ம் தேதி வரை இயக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 09-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 07.05 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் இந்த ரயில், புதன்கிழமை காலை 10.20 மணிக்கு சென்றடைகிறது.  

இதேபோல, ரயில் எண் - 02197 கோவை - ஜபால்பூர் (மத்தியபிரதேசம்) வாராந்திர அதிவேக சிறப்புக் கட்டண ரயில் வரும் ஜுன் 11-ம் தேதி முதல் ஜுலை 02-ம் தேதி வரை இயக்கப்படுகிறது. வரும் ஜுன் 011-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 07.00 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் இந்த ரயில், புதன்கிழமை மதியம் 12.45 மணிக்கு சென்றடைகிறது.  

மேலே குறிப்பிட்ட ரயில்கள் கோவையில் இருந்து திங்கட்கிழமைகளில் மட்டுமே இயக்கப்படுகிறது. இதில், 2 குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 10 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 4 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

வாராந்திர அதிவேக ரயில்  - ஜபால்பூரில் இருந்து சனிக்கிழமை முதல் 04.11.2017 மற்றும் 30.11.2017 வரை 9 முறை இயக்கப்படும்.

கோவையில் இருந்து திங்கட்கிழமை முதல் 06.11.2017 மற்றும் 01.01.2018 வரை 9 முறை இயக்கப்படும் 

இந்த ரயிலானது, பாலக்காடு, சொர்ணூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி, கன்னூர், பயனூர், கன்ஹாங்கட், கஷராஹோடு, மங்களூரு ரயில்நிலையம், முல்கி, உடுப்பி, மூகாம்பிகா சாலை பைந்தூர், குமதா, கர்வார், மட்கோன், திவிம், கூடல், கன்கவளி, ரத்னிகிரி, சிப்லுன், கேட், ரோஹா, பன்வேல், இகத்பூரி, மன்மத், புஷாவல், கந்த்வா, ஹர்தா, இட்டர்சி, பிப்பரியா, கதர்வாரா மற்றும் நரசிங்பூர் ஆகிய ரயில்நிலையங்களில் நிறுத்தப்படும்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (பிப்.,17) முதல் தொடங்குகிறது. 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...