கேரளாவில் பேருந்து கட்டணத்தை உயர்த்தக்கோரி ஸ்டிரைக்

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடைபெற்ற நிலையில், கேரளாவில் பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கோரி இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடைபெற்ற நிலையில், கேரளாவில் பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கோரி இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கேரளாவில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக கடந்த 14-ம் தேதி அம்மாநில அரசு அறிவித்த நிலையில், புதிய கட்டண உயர்வு மார்ச் 1 முதல் அமலுக்கு வரும் என்றும், புதிய கட்டண உயர்வின்படி சாதாரண பேருந்துகளில் ரூ.8-ம், விரைவு பேருந்துகளில் ரூ.11-ம் உயர்த்தப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது.

ஆனால், பேருந்து கட்டண உயர்வை ரூ.8-க்கு பதிலாக ரூ.10ஆக உயர்த்த வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் கேட்டிருந்தனர். இது தொடர்பாக 15-ம் தேதியன்று தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை கட்டணத்தையும் ஏற்க தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் மறுத்து விட்டதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால், தற்போது உயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டண உயர்வு போதுமானதாக இல்லை எனக்கோரி கேரளா முழுவதும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் இன்று (பிப்.,17) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தைத் துவக்கி உள்ளனர். இதனால், கேரளாவில் பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...