சின்னத்திரை நடிகர் சபரிமலையில் மாரடைப்பால் மரணம்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட நடிகர் கோவை தேசிங்கு சபரிமலையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக நட்சத்திரங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட நடிகர் கோவை தேசிங்கு சபரிமலையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக நட்சத்திரங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பல்லடம் பனப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (50). இவருக்கு கவிதா (42) என்ற மனைவியும், லாவண்யா (23), ப்ரியா (21) ஆகிய இரு மகள்களும் உள்ளனர். ஓட்டுநராக ஆரம்பக் காலத்தில் வேலை செய்து வந்த சுப்பிரமணி வாட்டசாட்டமாக இருந்ததால் பல்வேறு மேடைநாடகங்களில் நடிக்கத் துவங்கினார். இவரது நடிப்பைக் கண்டு திரைப்படங்களில் நடிக்கவும் அழைப்புகள் வந்தன. அதனைத் தொடர்ந்து, சுப்பிரமணிக்கு கோவைதேசிங்கு என்ற பட்டப்பெயரும் கிடைத்தது. மனம்கொத்திப்பறவை உள்ளிட்ட திரைப்படங்களிலும், சந்தனக்காடு, வாணி-ராணி, வைரநெஞ்சம் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை சபரிமலைக்கு மாலையணிந்து யாத்திரையாகச் சென்ற அவர், சரங்கொத்தி என்ற பகுதியில், மாரடைப்பால் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பல்லடத்திலுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சபரிமலையிலிருந்து நடிகர் சுப்பிரமணியின் உடல் பல்லடம் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில், தொழிலதிபர்கள், அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

நடிகர் கோவைதேசிங்கு இறந்த சம்பவம் குறித்து அவரது நண்பர்கள் கூறுகையில், பழக மிகவும் எளிமையானவர் என்றும், அவரது இறப்பு தங்களுக்கு வேதனையளிப்பதாகவும் தெரிவித்தனர். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...