ஜெ., பிறந்த நாளையொட்டி அன்னதானம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அன்னதான நிகழ்ச்சியை, உணவுகளைப் பரிமாறி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

மேட்டுபாளையம்: ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அன்னதான நிகழ்ச்சியை, உணவுகளைப் பரிமாறி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள முத்தலாம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர், குன்னூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பின்னர், அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு வருகை புரிந்தார். கோவை அ.தி.மு.க., அம்மா பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 10,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு குழுமியிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களுக்கு உணவுகளைப் பரிமாறி அன்னதானத்தை தொடங்கிவைத்தார்.

அவருடன் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கோவை, நீலகிரி மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கலந்துகொண்டனர். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வளாகத்தில் நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்ற காரணத்தால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சியை முடித்து விட்டு முதலமைச்சர் பழனிச்சாமி தனது சொந்த ஊரான எடப்பாடிக்கு புறப்பட்டுச் சென்றார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...